ஆன்மீகவாதியும் அரசியல்வாதியும் ஒரு விழாவில் கலந்து கொண்டனர் . அரசியல்வாதி சிரிக்கச் சிரிக்கப் பேசி கூட்டத்தை குதூகலப் படுத்தினார்.
"நான் மிகவும் சந்தோஷமாக இருந்த தருணம் எப்போது என்று கேட்டால் அது ஒரு பெண்ணின் அரவணைப்பில் இருந்தபோது ....இதில் ஒரு உண்மை என்னவென்றால் அந்தப் பெண் வேறு ஒருவரின் மனைவி" என்றார் அவர் தன் பேச்சின் இடையே.
அரசியல்வாதி இப்படிப் பகிரங்கமாகச் சொன்னதைக் கேட்டு கூட்டம் அதிர்ச்சியடைந்தது .
சற்று இடைவெளி கொடுத்து அந்த அரசியல்வாதி மீண்டும் சொன்னார். ஆம்! அந்தப் பெண் வேறு ஒருவரின் மனைவிதான். என் தந்தையின் மனைவி. அதாவது என் தாய். தாயின் அரவணைப்பில் மகிழாத குழந்தை உண்டோ?
கூட்டம் ரசித்து ஆர்பரித்து மகிழ்ந்தது.
அரசியல்வாதியின் பேச்சைக் கூட்டம் ரசித்து கண்டு ஆண்மீகவாதிக்கும் ஜோக் அடிக்கும் ஆசை வந்தது.
ஒரு கூட்டத்தில் தேவாரம், திருவாசகம் பற்றியெல்லாம் பேசிவிட்டு இடையில் அரசியல்வாதி சொன்ன ஜோக்கை சொல்லத் தொடங்கினார் .
நான் மிகவும் சந்தோஷமாக இருந்த தருணம் எப்போது என்று கேட்டால் அது ஒரு பெண்ணின் அரவணைப்பில் இருந்தபோது ....இதில் ஒரு உண்மை என்னவென்றால் அந்தப் பெண் வேறு ஒருவரின் மனைவி" கூட்டம் அதிர்ச்சியடைந்தது.
மீண்டும் பேச தொடங்கினார். "அந்தப் பெண் யார் என்றால் ..."
என்ன துரதிருஷ்டம்! ஜோக்கை எப்படி முடிப்பது என்று அவருக்கு தெரியவில்லை. சற்றுத் தடுமாறிய அவர், அந்தப் பெண் யார் என்பது எனக்கு மறந்து போய் விட்டது. அது அந்த அரசியல்வாதிக்குத் தான் தெரியும் என்று அவர் பெயரை சொல்லி சொன்னார். ஈராக் சென்ற புஷ் போல ஆனார் சாமியார்.
Monday, January 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment