Sunday, January 25, 2009

மூன்றாவது முறை பாய்ந்த மின்சாரம்

குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டிருந்தார் ஹென்றி ஷாரியர். பேருந்தில் ஏற முயன்ற முதியவரை கவனிக்காமல் விசில் கொடுத்ததால் அம்முதியவர் மீது பேருந்து ஏறி சம்பவ இடத்திலேயே இறந்துவிட வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்றைக்கு தீர்ப்பு வெளியிடும் நாள். ஹென்றியை ஒரு முறை கூர்ந்து பார்த்த ஜட்ஜ், கவனக்குறைவால் ஒரு உயிர் பலியானதற்கு காரணமான கண்டக்டர் ஹென்றி ஷாரியற்கு மரண தண்டனை வழங்கினார்.

பிரான்ஸ் நாட்டு வழக்கப்படி, அவரை மின்சாரம் பாய்ச்சும் கூடத்திற்கு அழைத்து சென்றனர். மின்சாரம் பாய்ச்சும் அறையில் இரும்பு நாற்காலிகள் எலெக்ட்ரிக் வயர்களால் பிணைக்கப்பட்டு இருந்தன. அந்த அறை ஓரத்தில் ஒரு வாழைப்பழ தோல் கிடந்தது. ஹென்றியை நாற்காலியில் அமரவைத்து மின்சாரத்தை பாய்ச்சினார்கள். என்ன ஒரு ஆச்சர்யம்! ஹென்றிக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆதலால் தவறு அவருடையதல்ல என்று கருதி அவரை விடுவித்தார்கள்.

ஓரிரு வாரங்கள் கடந்தபின் மருபடியும் ஒரு பெண்மணி ஹென்றியின் கவனக்குறைவால் கால் தவறி விழுந்து உயிர் இழந்தார். மறுபடியும் அவர்க்கு அதே தண்டனை வழங்கப்பட்டு அதே அறைக்கு கொண்டுச்சென்றனர். இம்முறையும் வாழைப்பழ தோல் ஒரு ஓரத்தில் கிடந்தது. அவரை அமரவைத்து மின்சாரத்தை பாய்ச்சினார்கள். இந்த முறையும் அவர்க்கு எந்த வித பாதிப்பும் இல்லை. மீண்டும் விடுவித்தார்கள்.

அடுத்த நாள் ஒரு சிறுவன் மன உளைச்சலால் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டான். ஆயினும் பழைய குற்றங்களால் ஹென்றியை குற்றவாளி கூண்டில் நிறுத்தினார்கள். தீர்ப்பும் அவர்க்கு எதிராகவே வழங்கப்பட்டது.

அவரை அந்த அறைக்கு அழைத்து சென்றனர். இம்முறை அந்த வாழைப்பழ தோல் அவ்விடத்தில் இல்லை. அவரை அந்த நாற்காலியில் அமரவைத்து மின்சாரத்தை பாய்ச்சினார்கள். அதிர்ந்தவரின் உடலில் இருந்து பரிதாபமாக உயிர் பிரிந்தது.

என் கேள்வி, இரண்டு முறை மின்சாரத்தை பாய்ச்சியும் எந்த வித அதிர்வுக்கும் ஆளாகதவர் மூன்றாம் மூறை மின்சாரத்தால் தாக்கப்பட்டது ஏன்?

ஏன்?

ஏன்?

ஏன்?

கடந்த
இரண்டுமுறையும் தவறு அவருடையதாதலால் அவர் BAD CONDUCTOR. இறுதி முறை அவர் GOOD CONDUCTOR..

அன்புடன்
இரா.பிரபுசங்கர்

6 comments:

Naziasulthana said...

Good Post

butterfly Surya said...

சூப்பர். நல்லாயிருக்கு.

வாழ்த்துக்கள்.

VIKNESHWARAN ADAKKALAM said...

விளங்களை... வாழைப்பழ தோலுக்கும் இறப்புக்கும் என்ன சம்பந்தம்...

Prabhusankar said...

நன்றி வண்ணத்துபூச்சியார் ..

Prabhusankar said...

வாழைப்பழ தோல் just to confuse..
A good conductor only conduct electricity.Bad conductor does not conduct.

Anonymous said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

Post a Comment