திமுகவை கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்கள்கூட பிற கட்சிகளை எந்த ஒரு சூழ்நிலையிலும் வெளிப்படையாக ஆதரிக்க முடியாது.மற்ற கட்சியினுடைய செயல்பாடுகள் அப்படி.தமிழகத்தில் எந்த ஒரு உருப்படியான விஷயம் நடந்தாலும் நடந்திருந்தாலும் அது திமுகவினுடையதாகவே இருக்கும். இன்றைக்கு கலைஞர் அடுக்கடுக்கான திட்டங்களை அறிவித்துக் கொண்டே போகிறார். உலகளாவிய பிரச்சினைகள் தமிழ்கத்தினையும் பாதித்திருந்தாலும் , தமிழக அரசின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்று எவரும் கிடையாது. துணை முதலமைச்சரான பிறகு ஸ்டாலினின் செயல்பாடுகள் பிற கட்சியினரை மட்டுமல்ல , திமுகவினரையே ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளன.ஆட்சிக்கும் கட்சிக்கும் சம காலத்தில் வலு கொடுத்து வரும் ஸ்டாலின், தாய்க்குலங்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவராக உள்ளார். கலைஞரின் வாரிசுகளாலேயே திமுக சிதறிவிடும் என்ற எண்ணத்தை தவிடுபொடியாக்கி, திமுக இன்றைக்கு வலுபெற்று நிற்பது அவர்களால்தான் என்ற நிலை உருவாகியுள்ளது.
கட்டுக்கோப்பான கோட்டைபோல் திமுக காட்சியளித்தாலும் , உண்மையில் திமுக தனது உண்மையான தொண்டர்களை இழந்து விட்டது. திமுகவின் ஆணிவேரே சிங்கிள் டீக்கு வேலை செய்யும் தொண்டர்களும் , மிகச்சிறந்த பேச்சாளர்களும்தான் . இன்றைக்கு இந்த இரண்டு பலங்களும் இல்லாமல் பணபலத்தை மட்டும் நம்பியிருப்பது மிகப்பெரும் பலவீனம்.
பணபலம் படைத்தவர்கள் மட்டுமே இன்றைக்கு அரசியலில் நிலைத்து நிற்க முடியும் என்பதுதான் வேதனையான உண்மை. இதற்க்கு மிகச்சிறந்த உதாரணங்கள் JK ரித்திஷும் ஆலந்தூர் பாரதியும் .ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள திமுக் அமைச்சர்கள், ஒன்றிய செயலாளர்கள், கவுன்சிலர்கள் மட்டுமே இன்றைக்கு எந்த ஒரு தொழிலையும் செய்ய முடியும் என்னுமளவுக்கு எந்த ஒரு தொழிலையும் மற்றவர்களுக்கு விட்டுவைப்பதில்லை .கல்லூரிகள், பள்ளிகள், கேபிள், தொழிற்சாலைகள் என எல்லாமும் இவர்கள் வசமே உள்ளது. இவர்களின்
செயல்பாடுகள் மக்களுக்கு பெரும் அதிருப்தியை அளித்திருக்கிறது. சரியான் முறையில் இவர்களை ஒழுங்கு படுத்தாவிட்டால் நிச்சயம் திமுகவிற்கு இது மிகப்பெரும் சரிவை ஏற்படுத்தும்.
இவை ஒருபுறமிருக்க படித்தவர்களின் கட்சி என்ற இமேஜை கலைஞர் தனது செயல்பாடுகளால் தூள்தூளாக்கிகொண்டிருக்கிறார். இந்த வயதில் புகழுக்கும், விருதுக்கும் அவர் அலைவது திமுகவினருக்கே எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. விருதுகளையும், விழாக்களையும் அவர் தவிர்ப்பது சாலச்சிறந்தது.அவரின் மிகச்சிறந்த செயல்பாடுகளை மற்றவர்கள் புகழ அவகாசம் கூட கொடுக்காமல் அவர்களுக்குமுன் இவரே இவரை புகழ்ந்துகொள்வது அபத்தத்தின் உச்சம்.
திமுகவின் பேரணி, மாநாடுகளுக்குப் பெருமையுடன் சொந்த செலவில் செல்லும் இளைஞர்களை நான் என் சிறு வயதில் கண்டிருக்கிறேன். கொள்கைப் பிடிப்புள்ள இளைஞர்களை இன்றைக்கு எந்த கட்சியிலும் பார்க்க முடிவதில்லை. இது காலத்தின் மாற்றமா அல்லது அரசியல் கட்சிகளின் கோலங்களின் விளைவால் வந்த மாற்றமா என்று தெரியவில்லை. உலகம் முழுவதும் அரசியலில் முன்னோக்கிப் போய்க்கொண்டிருக்க நாம் மட்டும் பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம். தமிழகத்தின் அரசியலையே மாற்றிப் படைத்த திமுகவால் மட்டுமே இந்த நிலையையும் மாற்ற முடியும். தளபதியின் காலத்திலாவது தமிழக அரசியல் மாற்றமடைய வேண்டும்..
Sunday, December 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)

3 comments:
ur point is almost right.
தமிழக அரசியலில் தி.மு.கா வின் நிலைபாட்டை
தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள்.
நிச்சயமாக தளபதி தலைமுறையில் ( ஆட்சியில் )
இந்த குறைப்பாடுகள் சரி செய்யப்படும்.
காரணம் தளபதியின் செயல்பாடுகள் அதை
தெளிவாக காட்டுகிறது.
நட்புடன்.அபுல்.
http://abulbazar.blogspot.com
சரியான பார்வை தான்!
Post a Comment